அப்பாவை ஹீரோ என்று சொல்லும் நம்மில் பல பேர் அம்மாவை ஹீரோயின் என்றோ முன்மாதிரி என்றோ சொல்வது அரிது...
அப்பா தான் அறிவை சொல்லி கொடுப்பவர் என்று சொல்லும் நாம் அம்மாவிற்கு அத்தகைய இடத்தை கொடுப்பதே இல்லை ... அம்மாவிற்கு உணவு சமைப்பதே பிரதானமாக இருக்க கூடும் .... கடின உழைப்பாளி அப்பா தான் என்றெல்லாம் சொல்ல கூடும்... ஆனால் அதே கடின உழைப்பை அம்மா வீட்டில் கொடுக்காவிட்டால் நம் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறிதான்....
அம்மாவிற்கு எப்போதும் நாம் தியாகத்தையும் எளிமையையும் உழைப்பு சுரண்டலையும் கொடுக்காமல் சிறிது சுதந்திரம் கொடுப்போம்....
எனக்கு என் அம்மா தான் எல்லாமே.... சிறு வயதில் இருந்தே யார் பிடிக்கும் என்று கேட்டால் அம்மா என்று தான் சொல்லுவேன் இப்போதும் எப்போதும்....
பெண்கள் தன் அப்பாவின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போடுவது சரிதான் ஆனால் திருமணம் முடிந்த உடனேயே தன் கணவர் பெயரை பின்னால் போட்டுக்கொள்வது எந்த காதலில் எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை...
ஆனால் ஆண்களில் யாருமே தன் மனைவி பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டதாக சரித்திரமே இல்லை....
எனக்கு என் அம்மா தான் குரு தெய்வம் தோழி எல்லாமுமாக இருக்கிறார்...
நான் என் அம்மாவின் பெயரைத்தான் சேர்த்திருக்கிறேன்...
என் அம்மாவின் பெயர் அமுதா அம்மு என்று தான் அழைப்பார்கள் எல்லோரும்...
அம்மு தான் எனக்கு எல்லாமே....
அன்னையர் தினத்தன்று எழுத முடியவில்லை....
தினமும் அன்னையர் தினம் தானே!....
-Shakthi Ammu
அருமை!
ReplyDeleteஅன்னையின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டவரை இப்பொழுதுதான் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்தும் பாராட்டும்!
சொ.வினைதீர்த்தான்