அழகர்
விழாவின் நாயகன்
வருஷத்துல எல்லா நாளும் கொண்டாடுனும்னா அதுக்கு மதுரைல தான் இருக்கணும்...
அழகர கோவில்ல இருந்து வெளிய கூட்டிட்டு வர்ரதுல இருந்து திரும்ப மலைக்கு கூட்டிட்டு போய் விடுற வரைக்கும் ஆட்டம் கொஞ்சம் கூட குறையாம இருக்கும்...
பசியால யாருமே இருக்க மாட்டாங்க...
வழியெல்லாம் பசிக்கு ஊரெல்லாம் சோறு போடுவாங்க...
இந்த வெயில்ல யாரு வெளிய போரது மத்த மாவட்டத்துல உள்ளவங்க சொன்னாலும் கூட வெயிலே மேலுக்கு படாம ரஸ்னா மோர் -னு திரும்புன பக்கமெல்லாம் குடிக்கலாம்...
எங்க வீட்ல திருவிழாக்கு வினியோகம் பண்ண புளியோதரை தயிர் சாதம் சக்கரை பொங்கல்னு அமர்க்களமா ரெடியாகிட்டு இருக்கும் (கேட்டரிங் தொழில்)...
ஒரு பக்கம் ரெடியாகும் இன்னொரு பக்கம் வண்டில ஏத்தனு ஒரே பரபரப்பா இருக்கும்...
அதுனால வீட்ல எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சாமி பார்க்க முடியாது...
தனியாக எல்லாம் சென்று சாமி பார்த்திருக்கிறேன்...
அந்த பரவசமே தனி...
சாமி பாத்ததுமே ஒரு சந்தோசம் வரும் ஒரு திருப்தி வரும்...
மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை இல்லைதான் ஆனால் ஒரு வருஷம் அழகர பாக்கலனா 3 வருஷம் பாக்க முடியாம போயிரும்னு சொல்வாங்க...
அதே மாதிரி நடந்திருச்சு 2018 ல எங்க வீட்டு அழகன் பொறந்தான்... மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் நாளன்று தான் அழகர் வைகையாற்றில் இறங்கும் விழா...
அப்போது கூட ஆட்டோவில் வரும் போது எங்கயாச்சும் சாமிய பார்த்துரமாட்டோமானு ஒரு தேடல் இருந்துச்சு ஆனாலும் அந்த வருஷம் பாக்க முடியல...
2019 போன வருஷம் என் பையன் பிறந்தநாளன்று அழகர் ஆற்றில் இறங்கும் விழா செல்ல முடியவில்லை...
இந்த வருடம் கொரணா திருவிழாக்கு சாமியே வரல....ரொம்ப கஷ்டமாதான் இருக்கு....
தலைவர் இந்நேரம் கிளம்பி இருக்கணும்...
ஒரே ஆட்டமா இருந்திருக்கும் எப்படிலாம் ஆடனும்னு இரவெல்லாம் கூட தூக்கம் வராமா கனவுல பார்த்திட்டு இருப்போம் அழகர..
கனவுல கூட நினைக்கல திருவிழா இப்டி நடக்காம போகும்னு ..
அடுத்த வருஷம் மொத்தமா சேர்த்து கொண்டாடுவோம் இப்போ பொறுமையா இருப்போம்😉
சித்திரை திருவிழா நாயகன் அழகரை மிஸ் பண்றோம்..
அருள் புரியட்டும்...
Comments
Post a Comment