Skip to main content

dream

நடுகாட்டில் தனியாக இருந்தேன் அனாதையாக கடும் காய்ச்சலின் போதும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை...
கடும் மன அழுத்தத்தில் இருந்தேன் பேசுவதற்கு அழைப்பு விடுத்தேன் யாரும் எடுப்பதாக இல்லை நேரம் இல்லை என்பதே பதிலாக சொன்னார்கள்...
பதவியில் இருப்பவர்களிடம் நானாக சென்று உரையாடல் நிகழ்த்தினேன் அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் நான் கேட்ட சொல் எதுவும் கேளாதது போல்...
என் முயற்சியை என் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கேட்டேன் எவரும் பதில் அளிக்கவே இல்லை...
மனம் உடைந்து போகவில்லை முடிந்து போகவில்லை தொடர்ந்து முயற்சி செய்தேன் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்...
இந்தத் திருக்குறளை மட்டுமே தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு  என் உழைப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன்..

என்னிடம் பேசாத பல நண்பர்கள் அழைப்புமணியை தொடுக்கின்றனர்...
யாரோ ஒருவர் தன் உழைப்பினால் தான் நீ முன்னேறுகிறாய் என்ற வாக்கியத்தை வலியுறுத்துகிறார்கள்... யாரோ ஒருவர் நான் எப்போதும் உனக்கு உதவுவேன் என்ற பொன் வாக்கியத்தை ஆறுதலாக சொல்கிறார்கள்...
நான் என் மனதுக்குள் மெதுவாக சிரித்தேன் சற்றும் அகங்காரம் இன்றி...
என்னவெல்லாம் நடக்கட்டும் எதுவெல்லாம் நடக்க இருக்கிறதோ எல்லாமே தடையின்றி நடக்கட்டும் எல்லாவற்றையும் அந்த கடவுளின்  திருவிளையாடல் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்...
ஒரு நிமிடம் சற்று சிரித்து கேட்கிறேன் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...