Skip to main content

Posts

Showing posts from September, 2020

life nf

அடுத்த நாளுக்கான வேலையை செய்ய காத்திருக்கும் இரவு மிகவும் சுவாரஸ்யமானது.. அப்படி ரசித்து பிடித்து செய்யும் வேலையில் அசதி தெரியாது என்பார்கள்... அப்படி அந்த வேலை மூளையில் நடனமிட்டு கொண்டிருக்கும் வேளையில் சில பைத்தியக்காரத்தனங்கள் நடக்கும்.. நம்மை அறியாமலேயே பின் மண்டையில் சிரித்து ஒரு கணம் சற்று நிதானித்து அட வேலையப் பார்போம்னு நகர்ந்து போவோம் .. தன் தொழிலே உயிர் மூச்சாக இருந்து எந்த நேரமும் அதையே நினைத்து பசி தூக்கம் ஏதுமின்றி தற்செயலாக அவற்றையெல்லாம் செய்யும் பொழுது ஒரு வித திருப்தி கடைக்கும் பொழுது மனம்  பெரு மூச்சு விடும்... இதையெல்லாம் நிறைய திரைப்பட இயக்குனர்கள் சொல்லி கேட்ருப்போம்  கனவுகள் காணு தூக்கம் கொன்று .. இது கனவுகளின் செயல் நேரம் .. காண்பதற்கு இன்னும் கனவுகள் பல நூறு இருந்தாலும் சில கனவுகள் நடக்கும் பொழுது அணு அணுவாக அணுபவிப்பதில் வேறு ஏதேனும் சுகமுண்டா?? இப்படி ஒரு நாளுக்காக காத்திருந்தேன் ... என்னதான் சொன்னாலும் பிடித்ததை செய்தால் வாழும் போதே சொர்க்கம் தான் .... #am_back #2020_year_gifted #thank_god #be_yourself -Shakthi Ammu

Ammu

நான் நானாக இருக்க எப்போதும் என்னை அனுமதித்து ஆசிர்வதித்து அரவணைத்து கொண்டிருக்கும் என் அம்முவிற்கு நன்றி😘 ஊர்பழி பல வகையில் இச்செவிகள் கேட்டிருந்தாலும்  என்னை எப்போதும் முன்னோக்கி செல் என்ற ஒற்றை சொல்லை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பாள்... நான் பெரியாருடைய புத்தகங்களை படித்துவிட்டு நிறைய கேள்விகள் கேட்டாலும் நேர்மறையான பதில்கள் மட்டுமே வரும்.. ஆனால் ஒன்று இந்த உலகம் அப்படியல்ல என்பதை அன்பு மொழியில் எடுத்துரைப்பார்... நான் பதின் வயதில் பேசும் பேச்சுக்களுக்கும் கேள்விகளுக்கும் ஒரு விதமான ஆச்சர்ய தோரனை அவளிடம் இருக்கும்... கடவுளிடம் கூட கேட்டு பெறாத நிறைய விஷயங்கள் உள்ளது ஆனால் அம்மு நான் கேட்காமலேயே நிறைய செய்திருக்கிறாள்.. நான் எப்போதும் கடவுள் வடிவில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பேன்.. வாழ்வின் என் எல்லா மகிழ்ச்சிக்கும் அம்மு தான் மிக முக்கிய காரணம்  அம்முவை கட்டியணைத்து முத்தமிடுகிறேன் விரைவில் சந்திக்க வேண்டும்😘

missing friend

போதையின்றி பலமணி நேரம் உன்னிடம் மட்டுமே உலறி கொட்ட முடியும் கண்மணி... ஒரே வகுப்பறையில் ஒருநாள் கூட சேர்ந்து பயிலவில்லை ஆனாலும் படிப்பிற்கு காலமேது என்று நாமிருவரும் துணிந்து பயில ஆயத்தமானோம் ... கல்விக்கூடத்திற்கே செல்லாமல் கல்வி பயில வேண்டும் என்பது காலத்தின் திருவிளையாடல்தானே கண்மணி... நீயும் நாணும் புலம்பி கொட்டி தீர்க்கும் வார்த்தைகளை கேட்டு இந்த பிரபஞ்சம் கூட தன் காதுகளை மூடிக்கொண்டிருக்கலாம்.. நேர வரையறையின்றி நம் உதடுகள் தாளமிட்டுக் கொண்டிருக்கும் கண்மணி... நீயும் நானும் விரும்பியதும் விரும்பாததும் ஒன்றாகிப் போனது இறைவனின் ஆசிர்வாதம்... என்னுடைய வாழ்வின் உச்சகட்ட துன்பத்திலும் ஓ என்று சத்தமிட்டு அழுவதற்க்கு அரவணைத்து ஆறுதல் சொல்ல இல்லாவிட்டாலும் பத்து எண்களை தட்டியதும் மறுமுனையில் அன்பால் அரவணைத்தாய்... ஆயிரம் மனிதர்கள் இருக்கலாம் ஆனால் இறைவன் கொடுத்த வரமாய் நீ இருப்பாய் கண்மணி... கைபிடித்து கதை பேசி நடந்த தூரம் மிக நீண்டது  அந்த வைகை நதிகரையோரம்... என் செல்ல கோபத்தை எப்போதுமே அலட்சிய படுத்தாமல் அதை நகைச்சுவையாக்கி முத்தமிட்டு சமாதானப்படுத்த உன்னால் மட்டுமே முடியும் கண்மணி.....