Skip to main content

missing friend

போதையின்றி பலமணி நேரம் உன்னிடம் மட்டுமே உலறி கொட்ட முடியும் கண்மணி...

ஒரே வகுப்பறையில் ஒருநாள் கூட சேர்ந்து பயிலவில்லை ஆனாலும் படிப்பிற்கு காலமேது என்று நாமிருவரும் துணிந்து பயில ஆயத்தமானோம் ...
கல்விக்கூடத்திற்கே செல்லாமல் கல்வி பயில வேண்டும் என்பது காலத்தின் திருவிளையாடல்தானே கண்மணி...

நீயும் நாணும் புலம்பி கொட்டி தீர்க்கும் வார்த்தைகளை கேட்டு இந்த பிரபஞ்சம் கூட தன் காதுகளை மூடிக்கொண்டிருக்கலாம்..
நேர வரையறையின்றி நம் உதடுகள் தாளமிட்டுக் கொண்டிருக்கும் கண்மணி...

நீயும் நானும் விரும்பியதும் விரும்பாததும் ஒன்றாகிப் போனது இறைவனின் ஆசிர்வாதம்...

என்னுடைய வாழ்வின் உச்சகட்ட துன்பத்திலும் ஓ என்று சத்தமிட்டு அழுவதற்க்கு அரவணைத்து ஆறுதல் சொல்ல இல்லாவிட்டாலும் பத்து எண்களை தட்டியதும் மறுமுனையில் அன்பால் அரவணைத்தாய்...

ஆயிரம் மனிதர்கள் இருக்கலாம் ஆனால் இறைவன் கொடுத்த வரமாய் நீ இருப்பாய் கண்மணி...

கைபிடித்து கதை பேசி நடந்த தூரம் மிக நீண்டது  அந்த வைகை நதிகரையோரம்...

என் செல்ல கோபத்தை எப்போதுமே அலட்சிய படுத்தாமல் அதை நகைச்சுவையாக்கி முத்தமிட்டு சமாதானப்படுத்த உன்னால் மட்டுமே முடியும் கண்மணி...

அதே குமார் மெஸ்ஸில் எஃகு லபாவும்..
அதே பன் புரோட்டா கடையில் நம் தார்மீக அண்ணன்களுடன் இன்னொரு முறை சாப்பிட செல்வோம் தயாராயிரு கண்மணி..

நாமிருவருக்குள்ளும் கோபமே படாமல் உலகத்தில் அனைத்து கோபங்களையும் கொட்டி தீர்த்துக்கொள்ள முடிவது காலத்தின் தவம்தானே கண்மணி....

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அந்த சாதாரண சந்திப்பிற்க்கு தாயாராயிரு கண்மணி...

அன்பு தோழிக்கு ஆயிரம் முத்தங்கள்..
பாசக்காரிக்கு இறைவனின் ஆசிர்வாதம்...

Mis u kanmani love u kanmani

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...