நான் நானாக இருக்க எப்போதும் என்னை அனுமதித்து ஆசிர்வதித்து அரவணைத்து கொண்டிருக்கும் என் அம்முவிற்கு நன்றி😘
ஊர்பழி பல வகையில் இச்செவிகள் கேட்டிருந்தாலும் என்னை எப்போதும் முன்னோக்கி செல் என்ற ஒற்றை சொல்லை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பாள்...
நான் பெரியாருடைய புத்தகங்களை படித்துவிட்டு நிறைய கேள்விகள் கேட்டாலும் நேர்மறையான பதில்கள் மட்டுமே வரும்..
ஆனால் ஒன்று இந்த உலகம் அப்படியல்ல என்பதை அன்பு மொழியில் எடுத்துரைப்பார்...
நான் பதின் வயதில் பேசும் பேச்சுக்களுக்கும் கேள்விகளுக்கும் ஒரு விதமான ஆச்சர்ய தோரனை அவளிடம் இருக்கும்...
கடவுளிடம் கூட கேட்டு பெறாத நிறைய விஷயங்கள் உள்ளது ஆனால் அம்மு நான் கேட்காமலேயே நிறைய செய்திருக்கிறாள்..
நான் எப்போதும் கடவுள் வடிவில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பேன்..
வாழ்வின் என் எல்லா மகிழ்ச்சிக்கும் அம்மு தான் மிக முக்கிய காரணம்
அம்முவை கட்டியணைத்து முத்தமிடுகிறேன்
விரைவில் சந்திக்க வேண்டும்😘
Comments
Post a Comment