ஒரு பெரு மாநகரம் கொடுக்காத நம்பிக்கையை...
*ஒரு சிறு கிராமம் என்னுள் நம்பிக்கை விதையினை விதைத்துள்ளது...
முகம் தேடி அன்பின் ஏக்கம் கொண்டு பேச சென்ற மனிதர்கள் கொடுத்த பெரும் ஏமாற்றம் ...
*அறிமுகம் இல்லா மனிதர்களின் இன்முகம் கூட நூறண்டு வாழ வழித்துணை செய்கிறது...
வாகன நெரிசலும் இரைச்சலும் மிக்க ஒரு நரகம்...
*வண்ண வண்ண பறவைகள் கீச்சிட்டு இருக்கும் ஒரு வனம்...
சொந்த வாகனம் நிறுத்துவதற்கு இரவல் இடம் கேட்டு முகத்தில் அறைந்தார் போல் திருப்பி அனுப்ப பட்ட ஒரு மாநரகம்...
*என் தலைமுறையே மகிழ்ந்து வாழ ஒரு அரண்மனை என் வீடு ....
யாருமில்லா தனி அறையில் ஓங்கி அழுத ஒரு அறை... நோயுற்ற போதும் யாருமின்றி அனாதையாக வாழ்ந்த ஒரு சிறை....
*எங்கும் சிரிப்பொலி மட்டுமே இசைந்து இன்முகம் மட்டுமே வாழ்க்கை .. தவப்புதல்வன் இணைந்து நிற்கும் வாழ்க்கையின் பெரு ஒளி ....
#Hatechn
#love_tvl*
#People_love_caring_unexpected
Comments
Post a Comment