Skip to main content

காத்திருத்தல்

சிறகடித்து வானம் தாண்டி பறக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை...
கூட்டினை விட்டு சிறிது தூரம் பயணித்து அடர்ந்த காட்டின் பசுமை வெளியில் இளைப்பாற வேண்டும்....
நோய்கள் பிரச்சனைகள் பசி தூக்கம்  இவை எதுவுமின்றி குளிர்ந்த மலையின் உச்சியில் சென்று தவம் செய்ய வேண்டும் .....
துப்பாக்கியிலிருந்து சீறிப் பாயும் குண்டினை போல வானிலிருந்து விழும் மழை நீரை விட அடர்த்தியான நீர்வீழ்ச்சியில் சென்று குளிக்க வேண்டும்....
கள்ளங்கபடமற்ற நண்பர்களோடு சப்தமிட்டு கூச்சலிட்டு ஆடி பாடி மகிழ வேண்டும்...
கருமை நிற வெளியில் பூமியின் காதலியின் வெளிச்சத்தில் அமர்ந்து உண்ண வேண்டும்...
நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன...
காத்திருத்தல் அவ்வளவு சுகமில்லையோ!

-Shakthi Ammu

Comments

  1. சின்னச் சின்ன ஆசை! சிறகடிக்கும் ஆசை!
    நிறைவேற வாழ்த்துகள்

    சொ.வினைதீர்த்தான்
    காரைக்குடி
    9443446388

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...