எவ்வளவு வயதானாலும் அன்பிற்கு ஏங்கும் மனத்தை என்ன செய்து தேற்றுவது...! வயதானால் எல்லாம் புரிந்துவிடும் என்று சொன்னார்கள்..! வயதானால் எல்லாம் பழகிவிடும் என்றார்கள்..! வயதானால் முதிர்ச்சி பல அனுபவங்களை தரும் என்றார்கள்..! வயதாக ஆக ஆக நிறைய புத்தகங்களின் அர்த்தங்கள் புரியும் என்றார்கள்..! வயதாக ஆக ஆக ஆன்மிகத்தில் அதீத நாட்டம் வரும் என்றார்கள்..! சட்டென்று பேரன்பு ஒன்றை எதிர் கொள்ளும் மனம் சற்று தடுமாறத்தானே செய்கிறது... அன்பிற்கு ஏங்கும் மனத்தை என்ன சொல்லி தேற்றலாம்...?? அது சரி அன்பிற்கு வானமே எல்லை... -Shakthi Ammu