Skip to main content

மனிதனின் ஏக்கம்

 ஒரு மனிதன் பிறக்கும் போதே மிகவும் அச்சுறுத்தலோடும் அதி பயங்கரமான உலகத்தை எதிர்கொள்ள துணிவில்லாமல் அழுகிறானோ!


அவன் தன் வாழ்நாளில் எவ்வளவு முறைதான் இறப்பதற்கு முன் இறந்து விடலாம் என்னும் எண்ணத்தை மேற் கொள்கிறான்..


சதா கண் விழிக்காமல் கருப்பையின் இருட்டில் பாதுகாப்பாய் இருந்தும் இப்பூவுலகில் எப்பொழுதும் இருட்டை பார்த்து பயம் கொள்வது ஏனோ..


ஒவ்வொரு நாழிகையும் 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு' என்று ஒவ்வொரு உணவும் செரித்த பின்னர் கிடைத்தது தேவாமமிர்தமோ.. ஆனால் மருந்தே உணவாகிவிட்டது கண்டு பயம் கொள்கிறானோ...


மனிதன் எதற்காக இந்த தொடர் ஓட்டத்தை தொடர்கின்றான்...

 

நான்கு சுவர்களுக்குள் இருக்கும் மனிதர்களுக்காகவா..!


எதையோ தேடி அங்குமிங்கும் அலைகின்றான்..

பலரை வெறுக்கிறான்..

சிலரை ரசிக்கின்றான்..

வெகு சில நேரம் யாசகம் வேண்டி நிற்கிறான்..

யாரிடம் எதற்காகவோ...!


மொழி அறியாத சிறு குழந்தையிடம் தன் முகம் சுளித்து பாருங்களேன் 

அக்குழந்தை கூட அருமையாக சொல்லிவிடும் வாழ்க்கையில் மனிதன் வேண்டுவது அன்பைத்தானே தவிர வேறொன்றும் நானறியேன் பராபரமே என்று


அன்பு செய்வோம் அன்பை தவிர வேறென்ன இந்த அற்ப வாழ்க்கையில் சாதித்து விடப்போகிறோம்..!❤️

Comments

  1. அன்பு செய்வது அவ்வளவு சுலபமல்ல...அன்புக்கு முதல் படிக்கட்டே சகிப்புத்தன்மை.. அது இருந்து விட்டால் அன்பு என்ற வார்த்தை அழகானதாகி விடும்.. வாழ்த்துகள்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...